ஞாயிறு, 24 ஜூலை, 2011

அம்மா...

ஆயிரம் படைப்பு நாம் படைத்தாலும்
உன்படைப்புக்கு ஈடாகுமா

என்னை ஆக்கிவிட்டவளே
என்றும் விணாகாது உன் ஆக்கம்

எனக்கு சக்தி தந்தவளே
உனக்கு சக்தியின் இருப்பிடம் என்றும்

பாசத்தினை உன் இரத்தத்தால் ஊட்டியவளே
என் பாசத்தினை அணைத்து தாய் குலத்துக்கும் காணிக்கை ஆக்கிறேன்

சாதனையை சதத்தால் தந்தவளே
என்னை காக்கும் போது வீரம் தந்தவளே

உலகத்தின் ஒரு மொழியானவளே [அம்மா ]
என் சந்தோசம் அம்மா எனும் சொலில் உள்ளதே

இன்று நடமாடும் தெய்வம் நீ
அதனால் தான் அணைத்து தெய்வத்தை கும்பிடும் போது
நீ நல்லாய் இரு என்று ஏன்எனில்
தாய் நல்லாக இருந்தால்
சேய் நான் எப்படி இருப்பேன்
உலக்கதின் விலை மதிப்பற்ற சொத்தே நீ


***************************************************
அம்மா ----இயற்கையின் ஒலி
     [குழந்தை வாய்திறக்கும் பொது ; 'அ' ஒலி ,மூடும் போது; 'ம்' ஒலி , 
     வேகமாக வரும் போது அம் > அம்ம> அம்மா]

தாய் -- பால் அமுது தந்த ஆய்
     [தந்த ஆய் -தாய் ...அதனால் தான் தாய்மை எனப்படுகிறது ]

அன்னை --அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னை [அன்னை திரேசா]


உங்கள் :சிவறூபன்
  

சனி, 23 ஜூலை, 2011

பொன்மொழிகள்-3

ஒரு விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதில் ஏற்படும் அவமானம் பற்றிப் பேசாதே;அந்த ஒன்று இருப்பதே அவமானம் தானே.
**********
இங்கிதம் தெரியாத பெண்ணுக்கு
சங்கீதம் தெரிந்து என்ன பயன்?
**********
கடமையைச்செய்;மௌனமாக இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்.
**********
மனிதனுடைய ஆசைகளுக்கு அளவில்லை;அதேபோல அவனுடைய ஆற்றல்களுக்கும் அளவில்லை.
**********
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லாசமாகத் திரிகின்றன.நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்;அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.
**********
நமது கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்தில் இருந்து வருகிறது.
நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து வருகிறது.
ஆக நமது கெட்டிக்காரத்தனம் நமது முட்டாள்தனத்திலிருந்தே வருகிறது.
**********
பேச்சில் ஆழம் அதிகம் இல்லாதபோது நீளம் அதிகமாக இருக்கும்.
**********
வலி இல்லையா?கை இல்லை.
முள் இல்லையா?சிம்மாதனம் இல்லை.
துன்பம் இல்லையா?புகழ் இல்லை.
சிலுவை இல்லையா?மகுடம் இல்லை.
**********
சும்மா எச்சரிக்கையுடன் நின்று கொண்டிருந்தால் மட்டும் உலகில் உங்களுக்கென்று தனி இடம் கிடைத்து விடாது.தாக்குங்கள்;அடிபடுங்கள்;அப்போதுதான் கிடைக்கும்.
**********
ஏமாற்றுக்காரனை ஏமாற்றுவது எமாற்றமல்ல.
**********
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்;அவற்றைக் கிளிசல்கலாகவும்,அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
**********
பாதிப்பணக்காரன் ஆகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
**********
சட்டங்களை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன.
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.

**********
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கி உள்ளது.
நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
**********
மனிதன் பகுத்தறிவு சொல்கிறபடி நடப்பதில்லை.
ஆசை சொல்கிறபடிதான் நடக்கிறான்.

**********
குழந்தை இளமையாய் இருக்கும்போது பெற்றோருக்குத் தலைவலி.
அதுவே வயதாகிவிட்டால் பெற்றோருக்கு நெஞ்சுவலி.

பொன் மொழிகள்.2

தன செயலுக்குத்  தானே சிரிக்காதவன் \
மற்றவர்களிடம் அந்த வேலையை ஒப்படைத்து விடுகிறான்.

**********
'என் அபிப்பிராயத்தை சொல்லவா?'என்று யாரேனும் ஆரம்பித்தால் நிச்சயம் அவர் உங்கள் கருத்துக்கு மாறான கருத்தை சொல்லப் போகிறார் என்று பொருள்.
**********
தம்மிடம் இல்லாத பணத்தைக் கொண்டு
தமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கி அடுக்கி
தமக்குத் தெரியாதவர்களைக் கவர எண்ணுவது
பலருக்கும் வாடிக்கை ஆகி விட்டது.

**********
நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.
**********
நகைச்சுவை உணர்வு நிரம்பிய மனிதன்,மென்மையான இலவம் பஞ்சு அடைத்த தலையணை போன்றவன்.அவனும் லேசாக இருப்பான்.அடுத்தவருக்கு இதமாகவும் இருப்பான்.
**********
தைரியம் என்பது அச்சம் இன்றி இருப்பது அல்ல.பயந்தபின்,
அந்த நிகழ்வை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான்.
**********
பயம் கதவைத் தட்டுகிறதா?நம்பிக்கையை எழுந்து போய் கதவைத் திறக்க சொல்லுங்கள்.வெளியே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.
**********
வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோசங்களையும்  அனுபவித்து விடுங்கள்.
நாளை,ஒருவேளை,திரும்பிப் பார்க்கையில் அவை தவற விடப்பட்ட பேரின்பமாகத் தெரியும்.
**********
நீங்கள் வயதாவதால் சிரிப்பை நிறுத்துவதில்லை.
நீங்கள் சிரிப்பை நிறுத்துவதால்தான் வயதானவராகிறீர்கள்.

**********
கற்பனைதான் மிக உயரத்தில்  பறக்கக்கூடிய பட்டம்.
**********
பொய் சொல்வது என்பது
ஒரு சிறுவனைப் பொறுத்த மட்டிலும் அது தவறு;
ஒரு காதலனைப் பொறுத்த மட்டிலும் அது ஒரு கலை.
ஒரு மணமானவனைப் பொறுத்த மட்டிலும் அது இயற்கை.

**********
ரசித்ததை பொறாமை காரணமாக பாராட்டாத ஒருவன்
கொலைகாரனுக்கு சமமாவான்.

பொன் மொழிகள்.1


வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
**********
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
**********
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
**********
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
**********
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
**********
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
**********
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
**********
ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
**********
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
**********
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.
**********

காதல் பொன் மொழிகள்,1

காதல் என்பது எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொ‌ன்றை சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல் காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் எ‌ன்ன சொ‌ல்‌கி‌ன்றன எ‌ன்பதை இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம். 

webdunia photoWD
அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன் தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை. 

இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும். 

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவு‌ம் வைக்க முடியும்.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.

எ‌ன்ன ‌நீ‌ங்களு‌ம் ஏதாவது சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்‌று ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? ‌ம்‌ம்‌ம் சொ‌ல்லு‌ங்களே‌ன். 


thans:webdunia

மனதைக் கவர்ந்த சில பொன்மொழிகள்




காதல் என்பது............. 
எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.

ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை. 

இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

காதல் என்பது அழகான கனவு.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும். 

காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.

காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்.

காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.

thanks webdunia.