சனி, 23 ஜூலை, 2011

பொன்மொழிகள்-3

ஒரு விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டதில் ஏற்படும் அவமானம் பற்றிப் பேசாதே;அந்த ஒன்று இருப்பதே அவமானம் தானே.
**********
இங்கிதம் தெரியாத பெண்ணுக்கு
சங்கீதம் தெரிந்து என்ன பயன்?
**********
கடமையைச்செய்;மௌனமாக இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்.
**********
மனிதனுடைய ஆசைகளுக்கு அளவில்லை;அதேபோல அவனுடைய ஆற்றல்களுக்கும் அளவில்லை.
**********
கிளிகள் கூண்டில் அடைக்கப்படுகின்றன.காக்கைகளோ உல்லாசமாகத் திரிகின்றன.நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள்;அல்லாதவர்கள் சுகப்படுகிறார்கள்.
**********
நமது கெட்டிக்காரத்தனம் நமது அனுபவத்தில் இருந்து வருகிறது.
நமது அனுபவமோ நமது முட்டாள்தனத்திலிருந்து வருகிறது.
ஆக நமது கெட்டிக்காரத்தனம் நமது முட்டாள்தனத்திலிருந்தே வருகிறது.
**********
பேச்சில் ஆழம் அதிகம் இல்லாதபோது நீளம் அதிகமாக இருக்கும்.
**********
வலி இல்லையா?கை இல்லை.
முள் இல்லையா?சிம்மாதனம் இல்லை.
துன்பம் இல்லையா?புகழ் இல்லை.
சிலுவை இல்லையா?மகுடம் இல்லை.
**********
சும்மா எச்சரிக்கையுடன் நின்று கொண்டிருந்தால் மட்டும் உலகில் உங்களுக்கென்று தனி இடம் கிடைத்து விடாது.தாக்குங்கள்;அடிபடுங்கள்;அப்போதுதான் கிடைக்கும்.
**********
ஏமாற்றுக்காரனை ஏமாற்றுவது எமாற்றமல்ல.
**********
சொற்கள் நம் சிந்தனையின் உடைகள்;அவற்றைக் கிளிசல்கலாகவும்,அழுக்காகவும் உடுத்த வேண்டாமே!
**********
பாதிப்பணக்காரன் ஆகி விட்டால் முழுப் பணக்காரன் ஆவது எளிது.
**********
சட்டங்களை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன.
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.

**********
நீ விரும்புவதை செய்வதில் உன் சுதந்திரம் அடங்கி உள்ளது.
நீ செய்வதை விரும்புவதில் உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது.
**********
மனிதன் பகுத்தறிவு சொல்கிறபடி நடப்பதில்லை.
ஆசை சொல்கிறபடிதான் நடக்கிறான்.

**********
குழந்தை இளமையாய் இருக்கும்போது பெற்றோருக்குத் தலைவலி.
அதுவே வயதாகிவிட்டால் பெற்றோருக்கு நெஞ்சுவலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக