வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

நெடுந்தீவு அகிலன் கவிதை பதிவுகள்

Nesam





சுகமான வலியினை 
இதமாக பரிமாறும் 
இரு இதயங்கள் 

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உன்னைக் காதலித்த
காலங்களோ! வாரங்கள்
மாதங்களாகின மாதங்கள்
வருடங்களாகின முடிவெனும்
ஒன்றையே மகிழ்வோடு எதிர்பார்த்தேன்
நீயோ முடியாது என்றுவிட்டாய்
பின்னேதான் தெரிந்தது
நீ காதலிக்கவில்லை
காதலித்தது போல் நாடகம்
செய்கிறாய் என்று..
கனவாம் கற்பனையாம்
பலகோடி நினைத்தவையும்
மாயமாய் மறைந்து விட்டன -அன்பே
உன்னைக் காதலித்த எனக்காக
நீ தந்த பரிசு இது என்று
எப்போது புரிந்து கொள்வாய்
எனது புனித காதலை?..
காலங்கள் கடந்தாலும்
நேரங்கள் நகர்ந்து கொண்டே சென்றாலும்
உன் நினைவுகள் என்றும்
என் மனதில் அழியாச்ச சின்னங்களே..........

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் அவளே
எழுதிவைத்த காகிதங்களோ
என் வீட்டு குப்பைக் கூடையை
நிரப்புகின்றன
வடித்து வைத்த
காதல் கவிதைகள்
பேச முடியாத மலராக
இங்கே வாடுகின்றன
காத்திருந்த கால்களும்
கடிதம் நீட்டிய கைகளும்
என்றும் போல
இன்னமும் வலிக்கின்றன
பதினாறாக இருந்த பருவம்
கூட இருபத்திமூன்றாக மாறின
உன் மனம் ஏனே?
இன்னும் மாற மறுக்கின்றது.
என்னவளே--என்னுயிரானவளே
உனக்கும் ஒரு நாள் என் மீது
காதல் வரும் காலம்வரை!
உனக்காக நானிருப்பேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பெண்ணே உன்

கூந்தல் முடி

கொஞ்சம் கொடு
கிளிந்ந்து போன -என்
இதயத்தை தைப்பதற்கு
......................


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




கனவில் கூட

கரைசேர முடியாத

காகிதக்கப்பல் நான்

ஆசைப்பட்டது எல்லாமே
என் கரம் சேராமல்
தொலைவில்தான் இருக்கிறது
அன்று நிலா இன்று நீ..



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



இருள் இல்லாத உலகம்

நிலவு மூள்காத வானம்
மழைத்துளி சிலிர்க்காத மேகம்
தேன் சுரக்காத மலர்
நீ இல்லாத நான்
நான் உன்னை மறக்கும் நாள்
நாலு பேர் என்னை
சுமக்கும் நாள்......




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நிலவும் நீயும்

ஒரே தூரம் தான்

நிலையான - எனது

காதலுக்கு......

நெடுந்தீவு அகிலன்.





>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தலையணையில் கிடக்கும்
என்னவளின் தலைமுடி
தலாட்டு பாடுகிறது
நான் துங்கும் போது......

நெடுந்தீவு அகிலன்.


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



உனக்காக எழுதிய

கவிதை எல்லாம்

சேகரித்திருந்தால்

உலகப் புத்தகத்தில்
நானும் சாதனை
படைத்திருப்பேன்.......


நெடுந்தீவு அகிலன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



அன்று நீ 

வரமாட்டாயென்று

தெரிந்தும் பூங்கா

சென்றிருந்தேன்
நான் வரமாட்டேனென்று
தெரிந்தும்- நீயும்
பூங்கா வந்திருந்தாய்......



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


கிளந் தெழ முடியாமல்

உருகி நிற்கிறேன்

பாய்ந்தோட முடியாமல்

படிந்து நிற்கிறேன்
என் விழி தெரியவில்லை
என் விதி புரியவில்லை
தெரிவதெல்லாம் நீதான்
உன்முகம்தான்..........

நெடுந்தீவு அகிலன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>






பூக்களை பறிக்காதே

புன்னகையை பறி

பிடித்துக் கொள்வேன்....




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தோற்றத்தில் நான்

பெரியவன் ஆனேன்

தொலைந்து போன

உனது பாசத்துக்கு...

பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்-உன்
பாசம் வத்தால்-எனக்கு
பசியும் மறந்து போகும்.....

நெடுந்தீவு அகிலன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


என் தோட்டத்து

பூக்கள் எல்லாம்

புலம்பிக்கொண்டிருக்கு

நீ புன்னகை செய்ததை
ஒரு முறை பார்த்துவிட்டு..
பூக்களை பார்த்து
புன்னகை செய்யாதே
பூவுக்கும் ஆசை வரும்
உன்னைக் கண்டால்....

நெடுந்தீவ அகிலன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




இனியவளே

உனது அழகான

இதயத்தில் இனியாரையும்

அரசாட்சி நடத்த
இடம் கொடாதே
இடிகுண்டு போட்டு வடுவார்கள்.....


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




கிழிக்கப் படாத

தேதித் தாழ்களாய்

உன் நினைவுகள்......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



உனது காதலுக்காக

தாஜ்மாகாலை கட்டிக் கொள்ள

நானோரு சாஜகானும் அல்ல...

கண்களைப் பார்த்து 
கவிதை எழுதுவதற்கு
நானோரு கண்ணதாசனும் அல்ல...
உன் அழகை ரசித்து வரைவதற்கு
நானோரு டாவின்சியும் அல்ல...
நீ என்னை காதலித்து
உன்னால் கைவிடப்பட்ட ஆசாமி......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இரவில் என் காதலை

புற்களிடம் கூறினேன்

காலையில் அவை

கண்ணீர் வடித்தன
மொட்டுகளிடம் கூறினேன்
அவை சிரித்தன......

நெடுந்தீவு அகிலன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தண்ணீர் தொட்டி

மீன்களைப்போல

எனக்குள்ளேயே

நீந்திக் கொண்டிருக்கின்றன
உன் எண்ணங்கள்.....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அம்புலியில் இருந்து

அரவணைத்தாய் அன்று

ஆதவனில் இருந்து

எரிக்கிறாய் இன்று......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


காதலித்தேன்

கல்வியை இளந்தேன்

கட்டிப் பிடித்தேன்

காதலியை இளந்தேன்.....


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

அன்பு தோழி சிறு கவிதை பதிவுகள் 3




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அவளை கண்ட நாள் முதல்
இமைகள் துடிக்க மறுத்தன
விழிகள் தூங்க மறுத்தன
இருப்பினும்
விழிமூடி தூங்கினேன்
தூக்கத்திலும் கனவாக அவள்....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன் இனிய பெயரைக் தான் சொல்ல
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் நேசிப்பதனால் தானோ?????

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னோடு நான்
வாழப்போகும் அந்த
பசுமையான நாட்களே
என் நினைவை
ஆட்கொண்டிருக்கிறது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று மட்டும் என்னவோ
அவள் பார்வையில் புதிய பரிணாமம்
பார்வை சாரலை வீசி விட்டு
மறைந்து கொண்டு இருந்தாள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆத்மாத்தமான அன்பு
பரிசுத்தமான நேசம்
பாசத்தின் இறுக்கம்
இது உன் பிறப்பிடம்!
மனம் சோர்ந்து விழும் போது
நீளும் உன் பாசக் கரங்கள்!
அமைதியாய்…
நிதானமாய்…
மனதை வருடும் பாணியில்
உன் வார்த்தைகள்!
தலைப்பாரம் போக்குவதாய்
விரல் கோதும்
உன் அன்பு மொழிகள்!
இது என்ன?
இப்படியோர் காந்த சக்தி
உன்னிடத்தில் எப்போதும்
அமுத சுரபியாய்..?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என் கண்ணில் உன்னைத் தேடும் போது
என் அருகில் நீ இல்லை
என் அருகில் நீ நிற்கும் போது
என் இதயம் என்னிடம் இல்லை
எங்கே என் இதயம் என்று தேடும் போது
உன்னிடம் இருப்பதை தெரிந்தேன்
என் கண்கள் மீண்டும் உன்னை நாடிய போது
என்னுள் ஒரு புதிய உணர்வை உணர்தேன்
உன் மார்பில் முகம் புதைத்தேன்
உன் அணைப்பில் இருந்த அந்த கணம்
உன் அன்பை உணர்தேன்.
உணர்ந்து கொண்டேன்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விழிகளும் சுமைதான்
மனதிற்கு பிடித்த ஒருவரை
காண முடியாத போது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னிரு விழிகளையே
பார்த்து கொண்டிருக்கிறேன்...
விழுந்த இடத்தை பார்க்காதே
தடுக்கிய இடத்தை பார்
யாரோ சொல்ல கேட்டதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்னை கேட்காமல்
என் இதயம் துடிக்கலாம் ....!
"ஆனால்"
உன்னை நினைக்காமல்
என் இதயம் துடிக்காது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கொஞ்சி கொஞ்சி
பேசும் வஞ்சிகொடியே
உன்னில் தஞ்சம் கொள்ள
உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால் நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான் நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக.
என்னை உயிர்பிக்கின்றது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>