செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

அன்பு தோழி சிறு கவிதை பதிவுகள் 2




காலமெல்லாம் வாழ ஆசை
உன் காலடியில்
உன் கால் செருப்பாக அல்ல
உன்னை சிலிர்க்க வைக்கும்
கால்கொலுசாக........!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கவிதை என்னிடம்
கவிதை கேட்கிறது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே
விழுவது ஒரு சுகம்
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே
கரைவதும் ஒரு சுகம்
என்னோடு புது மாற்றம் தந்தாள்
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ
கண் தூங்கும் போதும் காவல் தந்தாள்
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்

ஓ ஹோ ஓ ....

ஒரு தேவதை வீசிடும்.......

என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே
நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்
ஒளி வீசும் காலை
இருள் பூசும் மாலை
உந்தன் முகம் எந்தன் கண்ணில்
மின்சாரம் இல்லா நேரத்தில்
மின்னலாய் வந்து ஒளி தருவாள்
அந்த வெளிச்ச மழையில்
நான் நனைந்திடுவேன்
விரல் தொட்டு விடும் தூரத்தில்
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்
புரியாத போதை
இது புரிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ ஹோ ....

அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா
வாசனை என் சொந்தம்
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா
அலை மட்டும் என் சொந்தம்

ஓ ஹோ ஓ ......

கண்ணாடி அவள் பார்த்ததில்லை
ஏன் என்று நான் கேட்டதில்லை
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல
அவள் கட்டளையை கேட்டு தான்
நான் கட்டுப்பட்டு வாழுவேன்
அறியாத பாதை இது அறிந்த போதும்
அவள் பக்கம் வர பக்கம் வர
படபடக்கும்

ஓ ஹோ ஓ.....

ஒரு தேவதை.......

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கவிதை
மிகப்பிடிக்கும் எனக்கு
உன்னை போலவே
அதற்காக உன்னை
கவிதையென்று
சொல்லமாட்டேன்
கவிதைக்குள்
அடங்காதவள் நீ.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உறவென்று வந்தாய் என்
உள்ளத்தைத் தைத்தாய்
உருகும் பனியாய்
உன் நினைவில் நான்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன் நெஞ்சம் 
வேதனை கொண்டால்
உயிர் வரை
என்னைச் சுடுவதென்ன....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ என் தங்கை மட்டுமல்ல
என் உயிர் தோழியும்கூட
என் தவறுகளை
மன்னித்துவிடு.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
செல்லமே
உன் தோளிலே தலைசாய்த்து
நான் உறங்க வேண்டும்
உன் விரல்கள்
என் தலைகோதவேண்டும்
உன் மார்பிலே
முகம் புதைத்து
நான் அழவேண்டும்
உன் கைகள்என்னைத்
தாலாட்ட வேண்டும்
உன் மடிமீது
என்னுயிர்க்கு
மரணம் வேண்டும்
உன் கண்ணீர்த்துளியிரண்டு
என் மீதுவிழ வேண்டும்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னோடு
பேசாத கணங்கள்
திருவிழாவில்
தொலைந்தகுழந்தையின்
தவிப்பைபோல...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தேடலில் பிறந்தது
நம் உறவு
புரிதலில் மலர்ந்தது
நம் அன்பு...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இருவரும், சேர்ந்து சிரித்தோம்..
சேர்ந்து அழுதோம் ..
சேர்ந்து பகிர்ந்தோம்..
இன்று நான் மட்டும் தனியாக....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக