செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

அன்பு தோழி சிறு கவிதை பதிவுகள் 1






உறவு இழந்து நான்
தனிமரமாக தவித்த போது
நினைத்தேன் இனி எந்த
உறவுக்கும்என் மனதில்
இடமில்லை என்று
என் எண்ணங்களை
தகர்த்தெறிந்தாய் நீ
என் அன்புத் தங்கையாக.................


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பட்டாம் பூச்சியாய்
இரண்டு உயிர்கள்
உறவு என்ன என்று
தெரியாமலே.......!
கை கோர்த்து பறக்கிறது....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


உனக்காக சில துளிகள்
என் விழிகளில் காத்திருக்கிறது
மறுபடியும் நாம் சந்திக்கையில்
என் விழிகளை பார்த்து விடாதே!
தேக்கி வைத்திருக்கும் சோகங்கள்
உன்னை கண்டதும்
என்னைத் தீண்டுவது மட்டுமில்லாது
உன்னையும் காயப்படுத்திவிடும்.



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


உன் கோவங்கள்
எனக்கு பிடிக்கும்.
ஏனெனில்
அதில் தானே
என் உறங்கிய உணர்வுகளும்
தெரியாத பலவீனங்களும்
வெளியில் வருகின்றன.



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


உறவு சொல்ல நமக்குள்
ரத்த சொந்தமும் இல்லை
உரிமை சொல்ல நமக்குள்
எந்த பந்தமும் இல்லை
ஆனால்
நமக்குள் இருக்கிறது
அழிக்க முடியாத பிணைப்பு......



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தோல்வியே அடையாத
ஒருவன் இதுவரை
இருந்ததில்லை
தோல்வியோடு மட்டுமே
ஒருவன் இதுவரை
இருந்ததில்லை



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


உன்னை பார்த்தாலே
யாருக்கு தான் பிரிய
மனசு வரும்?



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


தேவதை என்றால்
சந்தோஷத்தை கொடுக்கும்
ஆனால் அந்த தேவதையே
கண்ணீரில்.......



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


பூவின் வாசத்தை
பிரிக்க முடியும்
ஆனால் எனக்குள்
சுவாசமாக இருக்கும் உன்னை ....?????



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக