வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அன்பு தோழி சிறு கவிதை பதிவுகள் 3




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அவளை கண்ட நாள் முதல்
இமைகள் துடிக்க மறுத்தன
விழிகள் தூங்க மறுத்தன
இருப்பினும்
விழிமூடி தூங்கினேன்
தூக்கத்திலும் கனவாக அவள்....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன் இனிய பெயரைக் தான் சொல்ல
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் நேசிப்பதனால் தானோ?????

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னோடு நான்
வாழப்போகும் அந்த
பசுமையான நாட்களே
என் நினைவை
ஆட்கொண்டிருக்கிறது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று மட்டும் என்னவோ
அவள் பார்வையில் புதிய பரிணாமம்
பார்வை சாரலை வீசி விட்டு
மறைந்து கொண்டு இருந்தாள்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆத்மாத்தமான அன்பு
பரிசுத்தமான நேசம்
பாசத்தின் இறுக்கம்
இது உன் பிறப்பிடம்!
மனம் சோர்ந்து விழும் போது
நீளும் உன் பாசக் கரங்கள்!
அமைதியாய்…
நிதானமாய்…
மனதை வருடும் பாணியில்
உன் வார்த்தைகள்!
தலைப்பாரம் போக்குவதாய்
விரல் கோதும்
உன் அன்பு மொழிகள்!
இது என்ன?
இப்படியோர் காந்த சக்தி
உன்னிடத்தில் எப்போதும்
அமுத சுரபியாய்..?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என் கண்ணில் உன்னைத் தேடும் போது
என் அருகில் நீ இல்லை
என் அருகில் நீ நிற்கும் போது
என் இதயம் என்னிடம் இல்லை
எங்கே என் இதயம் என்று தேடும் போது
உன்னிடம் இருப்பதை தெரிந்தேன்
என் கண்கள் மீண்டும் உன்னை நாடிய போது
என்னுள் ஒரு புதிய உணர்வை உணர்தேன்
உன் மார்பில் முகம் புதைத்தேன்
உன் அணைப்பில் இருந்த அந்த கணம்
உன் அன்பை உணர்தேன்.
உணர்ந்து கொண்டேன்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
விழிகளும் சுமைதான்
மனதிற்கு பிடித்த ஒருவரை
காண முடியாத போது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னிரு விழிகளையே
பார்த்து கொண்டிருக்கிறேன்...
விழுந்த இடத்தை பார்க்காதே
தடுக்கிய இடத்தை பார்
யாரோ சொல்ல கேட்டதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என்னை கேட்காமல்
என் இதயம் துடிக்கலாம் ....!
"ஆனால்"
உன்னை நினைக்காமல்
என் இதயம் துடிக்காது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கொஞ்சி கொஞ்சி
பேசும் வஞ்சிகொடியே
உன்னில் தஞ்சம் கொள்ள
உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கனவுகள்
நிஐமாவதில்லை தான்..
ஆனால் நிஐங்களைவிட
கனவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
கனவில் தான் நீ என்னோடு
நீண்ட தூரம் பயணிக்கிறாய்
என்பதால்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
என் கண் முன்
ஒரு அழகான தேவதை
ஒரு கணம் சொக்கி தான் போனேன்
எனக்கு இப்படி ஒரு அதிஷ்டமா...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக.
என்னை உயிர்பிக்கின்றது

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக