புதன், 8 பிப்ரவரி, 2012

நெடுந்தீவு அகிலன் சிறு கவிதை பதிவுகள் 3





காதல் மலர்களை
உன் கண்களில்
நான் பறித்தேன்....

காக்கவைப்பது
காதலியின் குணம்..
காத்து இருப்பது
காதலனின் குணம்...


காத்திருந்த என்
கவிதைகள் அத்தனைக்கும்
காதலியாக உனது வருகை...


கவிதைக்கு உருவம் தந்த நீ
ஏன் என் காதலுக்கு
இதயம் தரவில்லை..!



தினமும் நீ
சேலைகட்டி போகிறாய்
ஏன்?
கண்ணாடி உன்னை
சேலைகட்டவா சொல்கிறது...!

நீ நியூசிலாந்து
பால் குடிப்பதால்
நியூசிலாந்து அழகாக இருக்கிறது..


முகம் தெரியாது ஆனால்
உன் மனம் தெரியும்..

இரவில் தெரியும்
வானவில் நீ - என்
இதயத்தில் உறங்கும்
நினைவும் நீ....



எழுது எழுது எனக்கு ஒரு
கவிதை எழுது
நீ என் காதலி என்று..

இந்திய
சேலைகட்டும்
இலங்கை தேவதை நீ...


பூக்களில் இல்லாத வாசம்
உன் கூந்தலில் கண்டேனடி
பூவைக்குள் இல்லாத வெட்கம்
உன்னிடம் கொண்டேனடி...

மனிதனால் செய்யப்பட்டது
அதிசயம் என்றால்!
இறைவனால் செதுக்கப்பட்ட நீ
அதிசயம் இல்லையா?...


முத்தத்தால் இதழ்களை மூடினேன்
சத்தம் இல்லாமல் அவள்
கண்களை மூடினாள்...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக